Friday, October 14, 2011

கவிதை: அலைவுறும் அகதி வாழ்க்கை

எமக்கு மொரு நாடிருந்தது – அங்கு
அழகான ஓர் வீடுமிருந்தது;
ஊரிருந்தது; உறவிருந்தது;
கனவாய் யாவும் ஒருநாள்
கலைந்து போனது.......

செல்லடித்து வாழ்வு
சிதைந்து போனது;
திசைக் கொன்றாய் உறவுகளும்
சிதறிப் போனது......
வேறோடு பிடுங்கி ஒருநாள்
வீசி எறியப்பட்டோம்
வீதிகளில்........

போர் தீயதென்று போதித்த
புத்தனின் வாரிசுகள் நடத்திய
யுத்தத்தில்
மொத்தமும் இழந்து போனோம்.....

பதுங்கு குழிகளுக்குள்ளும்
பலநாள் வாழ்ந்திருந்தோம்
பயத்தை மட்டும் புசித்தபடி;
உயிராசையில்
ஓடத் தொடங்கினோம்
தேசங்களைக் கடந்து........

பிள்ளைகள் ஒரு பக்கம்;
பெண்டுகள் ஒரு பக்கம்;
பேசும் மொழியும் மறந்து
அலைவுறத் தொடங்கினோம்
அகதிகளாய்.......



1 comment:

  1. அலைவுறத் தொடங்கினோம்
    அகதிகளாய்.......
    உண்மை தான்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete