Thursday, March 4, 2010

ஆனந்த விகடனில் எனது கவிதை:

இந்தவார ஆனந்தவிகடனில் (10/03/2010 தேதியிட்ட இதழ்) இரண்டு விஷேசங்கள். ஒன்று எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை; இன்னொன்று நானெழுதிய சிறுகவிதை – காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா!

ஆனந்த விகடனை வாசிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கப் பெறாதவர்களுக்காக எனது கவிதையை கீழே தருகிறேன்.

குழல் இனிது; மிஸ் இனிது

செல்ல மகள் சில்வியா
மெல்லத் தான்
பேசத் தொடங்கினாள்.....

அம்மா, அப்பா, மாமா
தாத்தா, பாட்டி என்று
உறவுகளின் பெயர்களை
அவளின்
உதடுகளுக்குள் ஏற்றி
உச்சரிக்கச் செய்வதற்குள்
உயிர் போய்விட்ட்து எங்களுக்கு....

ஆயினும்......
இரண்டரை வயதில்
பள்ளிக்குப் போய் விட்டு
வீடு திரும்பிய
முதல் நாளிலிருந்து
எல்லோரையும்
அழைக்கத் தொடங்கினாள்
மிஸ் மிஸ் என்று.....
-- சோ.சுப்புராஜ்

1 comment: